பிரமிள் தொடங்கி இசை வரையிலும்
வாசித்தாலும் இன்னும்
உறுத்திக் கொண்டிருக்கின்றன வார்த்தைகள் எழுத வராமல்.
நீருக்குள் கால் வைத்த நாள் கொண்டு
அரித்துக் கொண்டிருக்கிறது மீன்கள்
என் கொண்டாட்டங்களையும் தூக்கங்களையும்.
பாசமாய் கொடுத்த உன் இனிப்புருண்டையினை
உதிர்த்துத் தின்ற நாளில் உதிராத பிரியங்கள்
நீ விலகி நின்ற நாட்களில்
உதிரத் தொடங்கிவிட்டன
இவ்வளவு தான் சொல்ல முடிகிறது ஒரு நெடும் பாலைப் பிரிவை .
No comments:
Post a Comment